Saturday, July 27, 2013

நாங்களும் எழுதுவோம்ல !!!

எங்க படத்தோட டைரக்டர் ஒரு situation சொல்லி நாலு வரி எழுதி தர சொன்னார்

அடுத்த ரெண்டு மணிநேரம் கதற கதற எழுதின பஞ்ச் காதல் வரிகள் ... பாவம் டைரக்டர் ரெண்டு நாளா அமுர்தாஞ்சன் டப்பாவோட சுத்தறார் :)

உங்கள் பார்வைக்கு இதோ ...

....

ஒத்த கள்ளு கிறக்கம்
கள்ளி செடியும் பாடும்
இந்த ஜென்மம் ஒன்னே போதும்
இனி செத்தா கூட இனிக்கும்

....
கண்டதும் கொஞ்சிட ஏங்க
கல்லும் கவிதையாய் பாட
என் மனம் உன் மடி தேட
உன் விழி என் வழி காட்ட

....
காட்டு செடியா சிறுக்கி
அழகுல அணைச்சா இறுக்கி
என் மனச எரிச்சா கருக்கி
நா கரைஞ்சேன் காதலில் உருகி

....
காட்டு தீயா கருக
மனசு மடியில விழுக
என் வயசோ உன்னிடம் சறுக
இதயம் துடிக்குது இப்பவே சாக

....
காட்டு தேயில வாசம்
உன் பார்வை பட்டதும் வீசும்
வயசும் மனசும் ஏசும்
உன் வெக்கமும் கவிதையா பாடும்

....
ஐயோ நமக்கு பாட்டு எழுதவே வரலைன்னு பீல் பண்ணி எழுதினது இதோ ...


கடையில விக்குது முறுக்கு
டாஸ் மார்க் பாருல சரக்கு
புடிச்சிடுச்சி எனக்கு கிறுக்கு
இன்னுமும் வேணும்னா இருக்கு :)



டைரக்டர் சார் கவலை படாதீங்க எழுதறத நிறுத்தவே மாட்டேன்... நாம தூக்றோம் ஓகே  ;)